புத்தாண்டு வாழ்த்துக்கள்!


புத்தாண்டில் புது blogspot சென்று கொண்டாடுங்கள்:

சிறப்பம்சங்கள்...

** புத்தாண்டு பலன்கள்! (பிரபல ஜோதிடர் கணித்த புது வருட பலன்கள்)

** கிருஷ்ணனும் அர்ச்சுனனும்...(சிறுகதை)
** ஹலோ பிரதர்ஸ்! (.adhikaalai.com ல் வெளியான எனது சிறுகதை)
** ஸ்மார்ட் நியுஸில் எம்.ஜி.ஆர். செய்தி...
விரைவாக .srikarpagamspl.blogspot.com க்ளிக் செய்யுங்கள்!!


ஐ ஆம் சாரி!



செப்டம்பர் பதினொன்று அமெரிக்கா அட்டாக் நடந்து சில வருடங்கள் கழிந்தாலும் ஜோக்குகளுக்கு ஒன்றும் பஞ்சமில்லை. சமீபத்தில் இரண்டு ஜோக்குகள் படித்தேன். அதில் தெரியும் விஷயங்கள் உண்மையிலேயே இப்படி ஒரு சம்பாசனை நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஜோக் ஒன்று: அமெரிக்காவில் பென்டகன் அட்டாக் நடந்த பிறகு அதிபர் புஷுக்கு ஒரு போன் வந்தது. ரிசீவரை எடுத்து "ஹலோ" என்றார். எதிர் முனையில் பேசியவர் சீன பிரதமர்,"நான் ரொம்ப வருத்தப்படுறேன். இது ஒரு மிகப் பெரிய சோகம். பெண்டகன் அட்டாக்கில டாக்குமண்ட்ஸ் எதுவும் தொலஞ்சு போயிருந்தாலோ அல்லது எரிஞ்சு போயிருந்தாலோ வருத்தப்படாதீங்க... அதோட எல்லா காப்பிகளும் எங்ககிட்ட இருக்கு!" என்றார்.

ஜோக் இரண்டு: செப்டம்பர் பதினொன்று அன்று அன்றைய பாகிஸ்தான் அதிபர் முஷரப், அமெரிக்க அதிபர் புஷுக்கு போன் செய்தார். "என்னுடைய துக்கத்தை தெரியப்படுத்தி கொள்கிறேன். உண்மையிலேயே இது ஒரு சோகமான விஷயம். நிறைய மக்கள்... நிறைய கட்டிடங்கள்... ஐ ஆம் வெரி சாரி..."

புஷ்: கட்டிடங்கள்... மக்கள்... என்ன உளறறீங்க!

முஷரப்: ஒ... இப்ப அமெரிகாவில மணி என்ன?

புஷ்: இப்ப காலையில எட்டு மணி!

முஷரப்: ஊப்ஸ்... நான் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து போன் செய்யிறேன்.

srikarpagam

ட்ரோஜன் பரிசு!


கம்ப்யூட்டர் வைரஸ் பற்றி எழுதும் போது மறக்காமல் இந்த வைரஸ்ஸயும் பற்றி அவசியம் அலசுவார்கள். அது... ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ். இந்த ட்ரோஜன் ஹார்ஸ் வரலாற்று செய்திகளில் அடிபடுகிறது. அதாவது கம்ப்யூடர் கண்டுபிடிக்க படுவதற்கு முன் ட்ரோஜன் ஹார்ஸ் வந்து விட்டது. வைரஸ்ஸாக வரவில்லை. ஒரு போர் தந்திரமாக வந்து விட்டது. இனி வரலாற்று கதையை படித்தால் உங்களுக்கு சில விஷயங்கள் புரியும்.

சுமார் 3000 வருடங்களுக்கு முன் கிரேக்க நாட்டில் ஹெலன் என்ற பேரழகி இருந்தாள். அதே கால கட்டத்தில் ட்ராய் நகரத்தில் பாரிஸ் என்பவன் இருந்தான். இவன் ஹெலனை கடத்திக்கொண்டு போய் தன்னுடைய நகரத்தில் வைத்துக்கொண்டான். ட்ராய் நகரை கிரேக்கர்கள் முற்றுகையிட்டு பத்து வருட காலம் போரிட்டனர் . இருபுறமும் ஏராளமான வீரர்கள் இறந்தனர். ஆனாலும் ட்ராய் கோட்டை சுவர்களை தகர்த்த முடியவில்லை.
அப்போது ஒரு நாள் கிரேக்கர்கள் மத குருவான கால்காஸ் என்பவர், "இந்த கோட்டைச்சுவர்களில் முட்டிக்கொல்வதால் ஒரு பயனும் இல்லை. வேறு ஏதேனும் தந்திரம் செய்யுங்கள். வெறும் படை பலத்தினால் பிடிக்க முடியாது. " என்றார்.
ஓடிசஸ் என்ற கிரேக்க தளபதி ஒரு தந்திரம் சொன்னார். மிகப்பிரம்மாண்டமான ஒரு மரக்குதிரை ஒன்றை அருமையான வேலைப்பாடுகளுடன் தயாரித்து அதற்குள்ளே கிரேக்க வீரர்களை ஒளித்து வைத்து அதை ட்ராய் காரர்களுக்கு பரிசளிக்கலாம் என்றார். போர் நடத்துவது தான் தீரமே தவிர கோழைத்தனமான தந்திரங்கள் செய்ய கூடாது என்று சிலர் கூறினார்கள். ஆனால் பத்து வருடம் நடந்த போரினால் கிரேக்க படையினர் சலித்து களைத்திருந்தனர் .ஆதலால் ஒடிஸ்ஸஸ் யோசனையை ஏற்றார்கள்.
இறுதியில் ட்ரோஜன் குதிரை தயாரிக்கப்பட்டது. ட்ரோஜன் என்றால் ட்ராய் நகரத்து பிரஜை என்று அர்த்தம். அதற்குள் படை வீரர்கள் புகுந்து கொண்டார்கள். கிரேக்க படையினர் போரிலிருந்து பின் வாங்குவது போல் பாசாங்கு செய்து ஒளிந்து கொண்டு காத்திருந்தார்கள்.
ஒரு மாபெரும் மரக்குதிரை திடீரென்று தங்கள் கோட்டைக்கு வெளியே நிற்பதையும் கிரேக்கப்படை வீரர்கள் யாரும் இல்லாததையும் கண்டார்கள் ட்ராய் வீரர்கள். ஒவ்வொருவராக வெளி வந்து அதை அதிசயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு கிரேக்க வீரன் அங்கே வந்து, அந்த மரக்குதிரையை ட்ராய் மக்களுக்கு பரிசாக தந்து விட்டு கிரேக்கர்கள் ஊர் திரும்பி விட்டார்கள் என்று கதை அளந்தான்.
அந்த மரக்குதிரையின் அழகில் மயங்கிய ட்ராய் மக்கள் அவ்வளவு அருமையான பரிசு கிடைத்ததில் மகிழ்ந்து போய் தங்கள் ஊருக்குள் அதை இழுத்துச் சென்றார்கள்.
மரக்குதிரைக்குள் ஒளிந்திருந்த கிரேக்க வீரர்கள் உடனே வெளிப்பட்டு எதிபாராத விதமாக தாக்கி கோட்டை கதவுகளை திறந்து கிரேக்கப் போர்வீரர்கள் உள்ளே நுழையவும், நகரத்தை கொளுத்தி நாசப்படுத்தவும் வழி செய்தார்கள்.
இந்த கதையையும் இப்போதுள்ள ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ்ஸயும் ஒப்பிட்டு பார்த்தால், பெயர் காரணம் ஒத்துப் போவதை பார்ப்பீர்கள். ட்ரோஜன் ஹார்ஸ் என்பது நமக்கு அதிகப் பயன்பாட்டினை தரும் ப்ரோக்ராம் போல (அதாவது அழகான பரிசுப்பொருள் போல) தோற்றத்தில் வரும். இதனை மகிழ்வுடன் இன்ஸ்டால் செய்தால் அல்லது கம்ப்யுட்டருக்குள் வர அனுமதித்தால் வைரஸ் போர் வீரர்கள் கம்ப்யுட்டரை துவம்சம் செய்துவிடுவார்கள்.



சுத்தம் விருது போடும்!

'சுத்தம் விருது போடுமா! இத்தனை நாள் இது தெரியாமல் போயிற்றே!' என்று நினைப்பவர்கள், தனிமனித சுத்தங்களான உடல் சுத்தம், குடல் சுத்தம், மனச்சுத்தத்துக்கு விருது என்று எண்ணி விட வேண்டாம்.
இரண்டாவதாகச் சொன்ன குடல் சுத்தத்தை செயல்படுத்துவதற்கு திறந்த வெளிகளையும் சாலையோர சாக்கடைகளையும் அசுத்தப்படுத்தி சுற்றுப்புற்ச்சூழலை கெடுத்து விடுகிறார்கள்.
இப்படி ஒவ்வொரு மனிதனும் தன்னையும் தன் வீட்டையும் மட்டுமே சுகாதாரமாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் சுற்றுப்புறச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள தவறி விடுகிறார்கள். இதனால் தான் சிக்-குன் -குனியா, காலரா போன்ற நோய்களும், கொசுக்களின் பெருக்கமும் ஏற்படுகிறது என்பதை மறந்து விடுகிறார்கள்.
ஆனால் ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் மட்டும் இதை மறக்காமல், ஒவ்வொரு தனி மனிதரும் முயற்சி செய்து தங்கள் கிராமத்தையே சுகாதாரமாக வைத்து, அதற்கு விருது வாங்கி இருக்கிறார்கள். அதற்கு ஒரு சபாஷ் போடுவோம்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி ஒன்றியத்தில் இருக்கும் பச்சளநாய்க்கன்ப்பட்டி கிராம மக்கள் தான் அந்த சபாஷுக்கு சொந்தக்காரர்கள். சமீபத்தில் புனேயில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் மத்திய அரசின் நிர்மல் கிராம் புரஸ்கார் விருது பெற்ற ஊராட்சிகளில் பச்சளநாய்க்கன்பட்டியும் ஒன்று.
இந்த ஊராட்சியில் உள்ள 750 வீடுகளில், 80 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதியுள்ளது. வீட்டில் கழிப்பறை இல்லாதவர்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்துவதால் திறந்தவெளியை யாரும் கழிப்பறையாக பயன்படுத்துவதில்லை. இதையும் மீறி யாராவது திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தினால் கையில் தண்ணீர் சொம்புடன் பையில் ஐம்பது ரூபாயும் வைத்துக்கொள்ள வேண்டும். பைன் கட்ட வேண்டுமே! இந்த வம்பு எதற்கு என்று சுகாதார கழிப்பறைக்கு சென்று விடுகிறார்கள்.
இதுமட்டுமல்ல சாகடையில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதால் இந்த கிராம மக்கள் பெரிய அளவில் நோய் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. இங்குள்ள பனிரெண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களின் முக்கிய பணியே சுகாதாரம் காப்பது தான். மேல்நிலை தொட்டிகள் மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து விடுகிறார்கள்.
"கிராமத்தை தூய்மையாக வைப்பது ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பு என்று அசட்டையாக இல்லாமல், எங்கள் கிராம மக்கள் கூட்டு முயற்சி செய்து சுகாதாரத்தை கடைபிடித்ததால் இவ்விருது கிடைத்தது.. விருதுடன் தரப்பட்ட பரிசு தொகையை தூய்மையை பாதுகாக்க செலவிட முடிவு செய்துள்ளேன்" என்று ஊராட்சி தலைவி லட்சுமி கூறினார்.
இது போன்ற செய்திகளை ஊடகங்களும் சிறந்த முறையில் மற்ற கிராமத்தில் வாழும் மக்களுக்கும் சேர்ப்பித்தால் நோய் பெருக்கம் குறையும்.

நன்றி: அதிகாலை

காதல் சாட்டிங்!


"மூன்று மாதமாக பேசிக்கொள்கிறோம் ஆனால் உன்னுடைய போட்டோவை அனுப்ப மாட்டேன் என்கிறாயே..."
- என்று டைப் செய்து யாஹூ மெஸஞ்சரில் அனுப்பினான் ராஜேஸ். முப்பது நொடியில் பதில் வந்தது.
"போட்டோ அனுப்ப விருப்பம் தான். ஆனால், பத்திரிக்கை செய்திகளில் படிக்கும் நிகழ்ச்சிகள் என்னை தயங்க வைக்கிறது!"
தனக்குள் சிரித்துக்கொண்ட ராஜேஷ், "என்ன மாதிரி நிகழ்ச்சிகள்?" என்று தட்டிக்கேட்டான்.
"பெண்ணின் முகத்தையும் ஆபாசமான படத்தையும் இணைத்து நெட்டில் உலவ விட்டு வேடிக்கை பார்ப்பதே இப்போது வாடிக்கை ஆகி விட்டது. அதனால் தான்..."
"என்னை பற்றி முழுமையாக சொல்லி இருக்கிறேன். என் பெயர் கிரி என்று உண்மையை சொல்லி இருக்கிறேன். சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் திருமணமாகாதவன் என்று கூறினேன். இன்னும் உனக்கு நம்பிக்கை ஏற்படவில்லையா?"
"ஆனால் உங்கள் விலாசம் சரியாகச் சொல்லவில்லை. எந்த கம்பெனியில் வேலை பார்க்கிறீர்கள் என்றும் சொல்லவில்லை. அதனால் தான் தயங்குகிறேன்."
"நீயும் தான் உன்னுடைய விலாசத்தைச் சொல்லவில்லை, மைதிலி. நீ சாட் செய்யும் வார்த்தைகளை பார்க்கும் போது, நீ ரொம்ப சாப்டாக இருப்பாய் போல் தெரிகிறது. கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவளை போலும் தெரிகிறாய்"
"நீங்கள் அனுப்பும் வர்த்தைகளை பார்க்கும் போது எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. உங்களிடம் சாட் செய்யும் போது ஒரு பெரிய நிம்மதியை உண்ர்கிறேன். உங்களை போன்ற பெண்களுக்கு மதிப்பு கொடுத்து பேசும் ஒரு ஆணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கருதினேன். உங்களிடம் சாட் செய்யும் போது அந்த நிறைவு எனக்கு ஏற்படுகிறது."
ராஜேஷ்,'இதற்கு என்ன மாதிரியான பதில் அனுபலாம்' என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது-
"ஒரு நல்ல யோசனை! இன்னும் ஒரு வாரத்தில் நான் என் குடும்பத்தாருடன் சென்னைக்கு வர வேண்டிய வேலை உள்ளது. அப்போது அங்கே நேரில் சந்த்தித்துக் கொள்ளலாம் அல்லவா?"
"வெரிகுட்! இடத்தையும் குறிப்பிட்டு விட்டால் சவுகரியம்."
"முதல் சந்திப்பு என்பதால் மைலாப்பூர் சிவன் கோவிலில் சந்த்திப்போம்."
"அடையாளம்?"
"சிவப்பு கலர் சுடிதார். ஒயிட் ஹேண்ட் பேக். நீங்கள்?"
"ஒயிட் அன் ஒயிட் ட்ரெஸ் போட்டு இருப்பேன்."
"நேரம் மாலை 5 மணி!"
மாலை ஐந்து மணி சூரியன் தன்னுடைய வெப்பத்தை குறைத்துக் கொண்டு பணியை முடிக்கும் தருவாயில் இருந்தான்.
ராஜேஷ் ஹோண்டாவை நிறுத்தி விட்டு நடந்தான். பூ வாங்கிக்கொண்டு செப்பலை கழற்றி போட்டு விட்டு கோவிலுக்குள் நுழைந்தான். கூட்டம் அதிகமில்லை.
இன்று என்ன கிழமை? புதன்கிழமை. அது தான் கூட்டமில்லை.
உட்பிரகாரத்துக்கு வந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். மைதிலி எங்கே? சிவப்பு சுடிதார் எங்கே? வெள்ளை கைப்பை எங்கே?
வெளிப்பிரகாரம் வந்தான். எங்கே அவள்? எங்கே அவள்? வந்திருப்பாளா இல்லை ஏமாற்றிவிட்டாளா? சே... சாமி கும்பிடக்கூட இல்லை. அங்கே சற்று தூரத்தில் அவள் யார்? அருணா போல் இருக்கிறாளே! அவள் எப்படி இங்கே வந்தாள்? அட... என்னை பார்த்து விட்டு மறைந்து விட்டாளே. இவளுக்கு சென்னையில் என்ன வேலை? அட முட்டாளே! அவள் சிவப்பு சுடிதார் அணிந்திருந்தாளே... வெள்ளை கைப்பை வைத்திருந்தாளே... அப்ப மைதிலி தான் அருணாவா?
கோவிலை விட்டு வரும் போது பிச்சைக்காரர்கள் "அம்மா... தாயே..." என்றார்கள். சில்லறையை போட்டான். பிச்சைக்காரர்கள் டைவர்ஸ் செய்வார்களா?
வீட்டுக்குள் நுழைந்ததும் ஷோபாவில் தொப்பென விழுந்தான். எரிச்சலாக வந்தது.
கடைசியில் புஸ்ஸென்று போய் விட்டதே. தன் டைவர்ஸ் மனைவியிடம் சாட்டிங் செய்திருக்கிறேன். அவளா இவ்வளவு மென்மையாக சாட்டிங் செய்தாள். யோசி... யோசி! சம்பவங்களை கோர்வயாக்கு. கோர்வையாக்கினான். முதலில் சாட்டிங் செய்தவளும் கோவிலில் பார்த்தவளும் ஒன்று தானா? இது தற்செயலாகக் கூட நடந்திருக்கலாம் இல்லையா? எப்படி யோசித்து பார்த்தாலும் மைதிலியும் அருணாவும் ஒன்று தான் என்றது.
சரி, அருணா என்று வைத்துக் கொண்டாலும் அவளா இப்படி! நம்பவே முடியவில்லை. அவளின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து விட்டு தவறாக முடிவெடுத்து விட்டேனா? அவளுக்கும் சாப்ட் கார்னர் இருக்கிறது என்ற மற்றொரு பக்கத்தை பார்க்க தவறி விட்டேனா?
அருமையாக கவிதை தொடுத்தாள். நிதானமாக சிந்தித்து சாட் செய்தாள்.
அவளும் இப்படித்தானே என்னை பற்றி நினைத்துக்கொண்டிருப்பாள்! அவள் போன் நம்பர் தான் என்னிடம் இருக்கிறதே. போன் செய்து பார்த்தால் என்ன?
ராஜேஷ் செல்லை எடுத்து நம்பரை ஒத்த ஆரம்பித்தான்.
இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இவர்களை விட்டு விலகிச்செல்வோம்.**

நன்றி: அதிகாலை

திருவிழா!


"அவர் ஒவ்வொரு வீட்டை கடந்து செல்லும் போதும் அந்தந்த வீட்டுக்கு முன் நின்று கொண்டிருந்த பெண்கள் முளைப்பாரியை தூக்கி கொண்டு பின் தொடர்ந்தனர் "

srikarpagam.blogspot

சிறுகதை

நிஜமான கிராமத்து திருவிழாவை பார்த்திருக்கிறீர்களா? காட்டுபாட்டிக்கு வாருங்கள். ஏனென்றால் நான் இப்போது அங்கு தான் இருக்கிறேன், மருமகனாக!ஒரு நிமிஷம்... பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒரு நாளைக்கு நாலே நாலு பஸ் தான் வந்து செல்லும். இப்போது திருவிழா கூட்டம் வேறு... பார்த்து வாருங்கள்!
என்னை பற்றி நாலு வார்த்தை.
நான் மதுரைவாசி. எண்பது கிலோமீட்டர் தள்ளி உள்ள காட்டுபட்டியில் ஒரு பெண்ணை பிடித்து போய் கல்யாணம் செய்து கொண்டேன். என் மனைவி ரொம்ப... சரி, சரி... மைதிலி. கோவிச்சுக்காதே. உன்னை பற்றி அப்புறம் விளக்கி விடுகிறேன்.
என் மாமனாரை பற்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் அவரை சுற்றி தான் இந்த சம்பவம். அவரை அறிமுகம் செய்து வைக்கலாம் என்றால், அவர் இறந்து விட்டார். நேற்று தான் அடக்கம் செய்தார்கள். எனக்கு கூட சொல்லவில்லை. ஏனென்றால் இன்று திருவிழா... நேற்று இரவு எட்டு மணிக்கு இறந்திருக்கிறார். அந்த கிராமத்து வழக்கப்படி கேதம் சொல்ல கூடாதாம். இரவோடு இரவாக புதைத்து விட்டார்கள். இதில் விசேசம் என்னவென்றால் அவர் தான் அந்த கோவிலின் பூசாரி!
என் மாமனாருக்கு இரண்டு தம்பிகள். இருவரில் மூத்தவர்,"அண்ணி... நடந்தது நடந்து போச்சு. இந்த வருடம் சாமியை நான் தூக்குறேன்" என்றார்.
ஊர் பெரிசு ஒன்று,"அது சரி... ஆனால் உங்க அண்ணன் குடும்பம் கோவிலுக்குள்ள வர கூடாது. கேதம் விழுந்த வீடாச்சே!"
"அதெப்படி... அப்ப என் கொழுந்தனும் தான் கோவிலுக்குள்ள வர கூடாது. அப்புறம் எப்படி சாமி தூக்குவாராம்?" -இது என் மாமியார்.
"அப்ப யாரு சாமி தூக்குறது? இந்த ஊருக்குள்ள காளியாத்தால தூக்குற தைரியம் எவனுக்கு இருக்கு? அப்படியே வேற யாரும் தூக்கி... அந்த குடும்பத்துக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகி போச்சுன்னா யாரு பொறுப்பாளி..."என்று ஊர் பெரிசு உரக்க கூறி விட்டு சற்று நிறுத்தினார். பிறகு அவரே...
"அதனால இந்த வருஷம் உன் கொழுந்தனே சாமி தூக்கட்டும். ஆனா நீங்களும் உங்க குடும்பமும் கோவிலுக்குள்ள வரக்கூடாது"
"என் மகளும் மருமகனும் வந்திருக்காங்க... அவங்களுக்கு கல்யாணமாகி முத வருஷம். அவங்க வரலாமுல்ல..." எல்லோரும் என்னை பார்த்தார்கள்.
ஊர் பெரிசும் என்னை பார்த்து விட்டு,"அவங்க வரலாம். அவங்க வேற குடும்பம். நீயும் உன் ரெண்டு மகன்களும் வர கூடாது. முளைப்பாரி போட்டு இருந்தீங்கன்னா வீட்டிலேயே வச்சுக்குங்க."
"எங்கம்மா வர கூடாதுன்னா நானும் வரலே" என்றால் என் மனைவி.
"அது உங்க இஷ்டம்!"
ஊரே ஜே... ஜே... என்று இருந்தது. ஒரு வருஷமாக இயந்திர வாழ்க்கை வாழ்ந்து விட்டு கிராமத்து திருவிழாவுக்கு வந்து கலந்து கொண்டால் ஒரு ரிலாக்ஸ் கிடைக்கிறது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்.
மேளதாளம் ஒரு பக்கம்... தப்பு செட்டு ஒரு பக்கம்... குறவன் குறத்தி ஆட்டம் ஒரு பக்கம் இதில் ஒரு விஷேசம்... குறவன் குறத்தி ஆட்டத்தை பார்க்க கூட்டத்தில் முண்டியடித்தவர்கள் பெரும்பாலும் பெரிசுகள் தான். குடும்பத்து பெண்கள் பட்டு சேலை சரசரக்க அவரவர் வீட்டுக்கு முன் வாசலில் முளைப்பாரியை சுமந்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.
தெருமுக்கில் சாமி வந்து விட்டது. என்னுடைய சின்ன மாமனார் தான் சாமியை தூக்கி கொண்டு மெதுவாக வந்து கொண்டிருந்தார். வான வேடிக்கையும் தப்பாட்டமும் தூள் பறந்தது. கேமெரா செல்போன்களும், வெளிநாட்டு கையகல கேமிராக்களும் காட்சிகளை தின்றது. அவர் ஒவ்வொரு வீட்டை கடந்து செல்லும் போதும் அந்தந்த வீட்டுக்கு முன் நின்று கொண்டிருந்த பெண்கள் முளைபாரியை தூக்கி கொண்டு பின் தொடர்ந்தனர். அவர் பின்னே வால் போல் நீண்டு வந்தது கூட்டம்.
என் சின்ன மாமியார் எங்கள் வீட்டு பெண்களிடம் ஏதோ கண் சாடை காட்டினார். அவர்களும் புரிந்து கொண்டு முளைபாரியை வெளியே கொண்டு வந்து நின்று கொண்டார்கள். எனக்கோ படபடப்பாக இருந்தது. ஏதோ தகராறு செய்ய போகிறார்கள் என்று என் மனம் அலறியது. வீட்டு வாசலுக்கு சாமி வந்து விட்டது. திடீரென்று, "டேய்... நான் ஆத்தா வந்திருக்கேண்டா... ம.. ஊ... " என்று என் சின்ன மாமியார் அலறிய அலறலில் அந்த இடமே அமைதியானது. உடனே அங்கே நின்றிருந்தவர்கள் விபூதியை எடுத்து நெற்றியில் அப்பினார்கள். அந்த விபூதிகேல்லாம் அடங்குவதாக தெரியவில்லை. கூட்டத்திலிருந்து ஒருவர் வெளிப்பட்டு,"ஆத்தா... உனக்கு என்ன வேணும்?" என்று கேட்டார்.
"டேய் ... பூசாரி குடும்பத்தையும் கோவிலுக்குள்ள வர சொல்லுடா... முளைப்பாரியை கொண்டு வர சொல்லு!" என்று கீச்சு குரலில் கத்தினார். அங்கே கசமுசா உருவானது. ஆளாளுக்கு ஒன்று சொன்னார்கள். ஊர் பெரிசுகள் அவர்களுக்குள் பேசி கொண்டார்கள் அது வரைக்கும் சாமி ஆட்டம் நின்ற பாடில்லை. கடைசியாக...
"சரி ஆத்தா! முளைப்பாரியை தூக்கிட்டு வாங்க" என்றதும் ஆத்தா மலையேறி விட்டாள். பிரச்சனை சுமுகமாக முடிந்தது.
srikarpagam.blogspot

கடமையை செய்... பலனை...?!


யுத்த களத்தில் இருக்கும் அர்ஜுனனை பார்த்து பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், "அர்ஜுனா! நீ ஒரு கர்மயோகி என்ற முறையில் உன் கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே. பற்று பாசங்களை மறந்து, வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படாமல் உன் கடமையை செய். ஒன்றுபட்ட சமநிலையே யோகம் என்பதை நீ உணர்வாயாக. பலன்களை கருத்தில் கொண்டு செயல்படுவது தாழ்ந்த நிலையாகும்" கிருஷ்ண பரமாத்மா போர்க்களத்தில் நின்ற அர்ஜுனனுக்கு கூறிய இந்த அறிவுரையே கர்மயோகமாகும்.
ஒரு செயலை செய்வதற்கு முன் அதன் முடிவு எப்படி இருக்குமோ என்ற அச்சம் எல்லோருக்கும் இருக்கும். வெற்றி கிடைத்தாலும் கிடைக்கலாம்... தோல்வியை தழுவலாம்.
ஆகவே செயல் முடிவில் கிடைக்கும் பலனை யோசிக்காமல் மனதை ஒரு முகப்படுத்தி செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.
ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் போதே அதன் பலன் தோல்வியாக இருக்குமோ என்ற அச்சத்துடனே செயல்பட்டால், மனம் படபடப்பாக இருக்கும். ஒரு நிலையில் நில்லாது. அலை பாய்ந்து கொண்டே இருக்கும். ஒருமுனைப்படுத்தி செயலை செய்ய முடியாது.
மனம்," தோல்வி அடைந்து விடுவோமோ..." என்று பயந்த மாதிரியே, பலன் தோல்வியாகத்தான் இருக்கும். ஆகவே தான் கடமையை செய் பலனாகிய வெற்றி தோல்வியை நினைக்காதே என்று சொல்கிறார்.
கிருஷ்ணா பரமாத்மா சொன்னதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எடுத்து கொண்டு விவரிக்கிறார்கள். அதில் என்னுடைய கருத்து இது தான்.
ரஜினி, கிருஷ்ணர் கூறிய கருத்தையே மாற்றி கொடுக்கிறார். அவர் அதை அப்படி தான் புரிந்து கொண்டார் போலும். அதாவது நடித்து விட்டு அதற்கு சம்பளமாக பணத்தை எதிர்பார்க்கிறார். அதனால் தான் "கடமையை செய் பலனை எதிர்பார்" என்று தத்துவத்தையே மாற்றி விட்டார்.

என் கேள்விக்கு என்ன பதில்?


"இந்த பணவீக்கம் பணவீக்கம்னு சொல்றாங்களே... அப்படின்னா என்னண்ணே?"
"பொருட்களோட விலை ஏறுறது தாண்டா பணவீக்கம்"
"முன்னாடி 12 பெர்சென்ட் வரைக்கும் வந்துடுச்சு 13 பெர்சென்டை நெருங்கிடுச்சு அப்படின்னு சொன்னாங்க. அப்பெல்லாம் காய்கறி, அரிசி விலை எல்லாம் ரொம்ப ஏறல. ஆனா இப்ப பணவீக்கம் குறைந்திருக்குன்னு பேப்பர்காரன் போட்டு இருக்கான்... காய்கறி, அரிசி விலையெல்லாம் ஜெட் வேகத்தில ஏறிடுச்சே..."
"அடே... காய்கறி, அரிசி விலையெல்லாம் ஏறிஇருந்தாலும்,
இரும்பு கம்பி, போன்ற கட்டுமான பொருட்கள் விலையெல்லாம் விலை குறைந்திருக்கு. அதனால பணவீக்கம் குறைந்திருக்கு!"
"அப்ப பணவீக்கம் ஏறினாத்தான் காய்கறி விலை இறங்குமா...?"
"உன் கேள்விகளுக்கெல்லாம் என்னிடம் பதில் இல்லப்பா..."
"அப்புறம் இன்னொன்னு கேட்கணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன்..."
"கேளுடா..."
"அமரிக்காவில கறுப்பர் அதிபரா வந்திருக்காராமில்ல..."
"ஆமா! இருநூறு வருஷ அமரிக்க சரித்திரதுல நடக்காத ஒண்ணு ! அதுக்கென்ன இப்ப?"
"அவரு நம்ம தமிழ்நாட்டுகாரரா?"
"மூஞ்சில ஒரே குத்து! மூக்கு காணாம போயிடும். அவரு ஆப்ரிக்க அப்பாவுக்கும் வெள்ளைகார அம்மாவுக்கும் பொறந்தவரு. இத ஏன் கேட்கிற?"
"இல்ல... நம்ம பசங்களெல்லாம் இந்த குதி குதிக்கிராங்களே... அதான் நம்ம
தமிழ்நாட்டுகாரர் அதிபர் அயிட்டாரோன்னு..."
"சரிதான்... அமரிக்காவில அதிபர் கறுப்பர் ஆனா என்ன, வெள்ளையர் ஆனா என்னன்னு நீ கேட்கிற... கறுப்பர் அதிபரா வந்ததால இந்தியாவுக்கும் சில நன்மைகள் கிடைக்கும். அதனால மட்டும் கொண்டாடல. அடிமையாய் இருந்த ஒரு இனத்திலிருந்து அதிபர் தேர்ந்தெடுக்க பட்டுள்ளார் அப்படிங்கிற விஷயம்தான் பெரிசு!"

மிக சிறந்த விற்பனையாளராக>>>


மிக சிறந்த விற்பனையாளராக ஆவதற்கு சில டிப்ஸ்...(ஒரு புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது)
** நீங்கள் கடினமாக உழைக்க தயாராக இருந்தால் விற்பனை தொழில் சிறந்த பயன் அளிக்கும் பணி வாழ்வு ஆகும். விற்பனை தொழில் புதிய படைப்புகளை உருவாக்கவும் பணியை தேவைகேற்ப மாற்றி கொள்வதற்கும் இடம் அளிக்கிறது. ஒரு பொருளை விற்பனை செய்ய மிகவும் பொருத்தமான அணுகுமுறையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் விற்பனையாளருக்கு உள்ளது. விற்பனையாளர் தனது வருமானத்தை நிர்ணயித்து கொள்கிறார்.
**நீங்கள் எந்த பொருளை விற்பனை செய்தாலும் அதை பற்றி விவரமாக அறிந்து கொள்ள வேண்டும். இந்த பொருள் அறிவு உங்களுக்கும் உங்களது வாடிக்கையாளருக்கும் பயன் அளிக்கும். இந்த பொருள் அறிவு உங்களது தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்வதுடன் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் பதிலளிக்க உதவி புரியும். உங்களது பொருளை உபயோகிப்பதால் பெற கூடிய பயன்களை வாடிக்கையாளர்களுக்கு எடுத்து கூற முடியும்.
** உங்களது போட்டியாளர்களை உதாசீனபடுத்த கூடாது. போட்டியாளர்களின் பொருள்களை பற்றி விவரமாக அறிந்து கொண்டால் போட்டி பொருளை பற்றி உங்களிடம் யாரும் கேள்வி கேட்டால் பதில் தெரியாமல் தவிக்க வேண்டிய நிலை வராது.
** உங்கள் நிறுவனத்தை பற்றிய விவரங்களை அதிக அளவில் அறிந்து கொள்ள வேண்டும்.
** வாடிக்கையாளராக மாறக்கூடிய ஒருவர் தான், உங்களுக்கு இன்னொரு வாடிக்கையாளர் கிடைக்கும் வாய்ப்பை தருகிறார். அவர், உங்களது பொருளை அல்லது சேவையை பெற்றவுடன் வாடிக்கையாளராகி விடுகிறார்.
** வாடிக்கையாளராக மாற கூடியவரை பற்றிய விவரங்களை அதிக அளவில் அறிந்து கொள்ள வேண்டும். அவரது பெயர், தொழில், பொழுதுபோக்கு, பொருள் வாங்கும் முறை போன்ற அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். அவரது சொந்த விசயங்களை பற்றி கேட்க கூடாது. அதற்கு மதிபளிக்க வேண்டும். அவராக சொந்த விசயங்களை பற்றி கூறினால் அடக்கத்துடன் கேட்டு கொள்ள வேண்டும். அவரது சொந்த விசயங்களில் தலையிட்டு துருவி கேட்க கூடாது.

"ஊத்திட்டேன் முதலாளி!!"


"பெட்ரோல் வாங்கிட்டு வந்துட்டியா?"
"வாங்கிட்டு வந்துட்டேன் முதலாளி... இந்தாங்க..." என்று விட்டு ஒரு லிட்டர் பாட்டிலை நீட்டினான் வேலையாள்.
வாங்கி பார்த்த முதலாளி,"அளவு சரியா தான் இருக்கு. போய் வண்டி பெட்ரோல் டாங்கில ஊத்து!"
சிறிது நேரம் கழித்து... "என்னடா... ஊத்திட்டியா?" என்று கேட்டார் முதலாளி.
"ஊத்திட்டேன்..."
முதலாளி வண்டியை ஸ்டார்ட் செய்தார். அது ஸ்டார்ட் ஆகவில்லை. கிக்கரை காலால் அடித்து ஓய்ந்து போய்..."ஏண்டா... பெட்ரோலை ஊத்தினாயா இல்லையா?" என்று கேட்டார்.
"ஊத்திட்டேன் முதலாளி..."
"எல்லாத்தையும் ஊத்தினியா?"
"ஒரு சொட்டு கூட மிச்சம் வக்கல முதலாளி... எல்லாத்தையும் ஊத்திட்டு, போதாததுக்கு தண்ணிய விட்டு அலசி ஊத்தினேன்...!"என்றான் வேலையாள்.

இப்போது பேங்க் - பாதுகாப்பான முதலீடா?



மெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இந்தியாவிலும் ஏற்படும் வகையில் மத்திய அரசு ஒரு முயற்சியில் ஈடுபட்டது பலருக்கு தெரியாது. ஆனால், அந்த முயற்சியை நாங்களும் இடதுசாரிகளும் முறியடித்த பின்னர், "பொதுத்துறை வங்கிகள் நல்ல நிலையில் இயங்குகின்றன... யாருக்கும் பாதிப்பில்லை" என்று இப்போது நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மார்தட்டுகிறார்.

அதாவது, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பொறுப்பு ஏற்றவுடன், ஒரு மசொதாய் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். இந்திய பொதுத்துறை வங்கிகளில் வெளிநாட்டு மூலதனத்தை 74 சதவீதமாக உயர்த்த வகை செய்யும் மசோதா அது. ஆனால், நம்முடைய வங்கிகளில் வெளிநாட்டு மூலதனத்தின் மதிப்பு, பத்து சதவீதத்துக்கு மேல் போக கூடாது என்பது தற்போதைய சட்டம். புதிய மசோதாவுக்கு நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தோம். "இந்த மசோதா நிறைவேறினால், வங்கிகளில் இருக்கும் சாமானியர்களின் பணத்துக்கு உத்தரவாதம் இல்லை" என்று இடதுசாரிகள் கடுமையாக வாதாடினர். அந்த மசோதா நிறைவேறியிருந்தால், பொது மக்கள் பொதுத்துறை வங்கிகளில் தங்கள் சேமிப்பாக வைத்திருக்கும் பணம் மொத்தமும் இந்நேரம் அம்பேல் ஆகி இருக்கும்!

வரும் நாடாளுமன்ற கூட்ட தொடரில் பொதுத்துறை வங்கிகளில் வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்க வகை செய்யும் மசோதாவை தாக்கல் செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக நாங்கள் போராடுவது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த விசயத்தில் பொதுமக்களும் தங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்பது தான் எங்கள் அவசர வேண்டுகோள்."என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுசெயலாளர் வெங்கடாசலம் பேட்டி அளித்துள்ளார், ஒரு வார பத்திரிக்கைக்கு.
பங்கு சந்தை, மியூச்சுவல் பண்டு, போன்ற முதலீட்டு திட்டங்களில் பணத்தை போட்டால் ஆபத்து அதிகம் என்று வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து உள்ள லச்சகணக்கான மக்களின் நம்பிக்கையை இது குறைக்கிறது. மத்திய அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் பணத்துக்கு ஆபத்து வராத வண்ணம் செயல்படுவது உத்தமம்.
அமெரிக்காவில் இருந்து நாம் பாடம் கற்று கொண்டு அதற்கேற்ப நம்முடைய வங்கி செயல்பாடுகளை அமைத்து கொள்வது பலன் தரும்.

எதற்கு படிக்க வேண்டும்?







நாம் தினமும் எத்தனையோ செய்தித்தாள்களையும், வார மாத இதழ்களையும், நூலகத்தில் எடுத்து வந்த தடியான புத்தகங்களையும் (சில சமயம் தலையணையாக பயன்படும்) படிக்கிறோம்.
ஆனால் படிப்பதனால் என்ன பலன் ஏற்பட்டது என்று சிந்தித்து பார்த்திருப்போமா?
சற்று சிந்திப்போம்.
கடைகளில் அமர்ந்து செய்தித்தாளை ஒரு வரி விடாமல் படித்து விட்டு தான் (விளம்பரம் முதற்கொண்டு) கீழே வைப்பார். சிலர் சில குறிப்பிட்ட செய்திகளை மட்டும் படித்து விட்டு வைத்து விடுவார். தலைப்பு செய்திகளை மட்டும் வாசிப்போர் பலர்.
இதே செய்திகளை தான் கதை போல் கட்டுரையாக மாற்றி, வாசிபோர் மனம் மகிழும்படி கொடுக்கிறார்கள் ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர் போன்ற வார இதழ்களில். ஒரு சிறிய
விஷயத்தை வைத்து அது தொடர்பாக பல செய்திகளை ஒன்று திரட்டி கொடுப்பது தான் கட்டுரை. இது மாதிரி கட்டுரைகளை தான் நம்மால் படிக்க முடியும்.
எளிமையான உரையில் ஆங்கில கலப்பு சேர்த்து கதை தோரணையில் வரும் கட்டுரைகளை தான் நம்மால் தொடர்ந்து படிக்க முடியும்.
கடினமான சொற்களை போட்டு, ஒரே வரியில் மூன்று விசயங்களை வைத்து தன் தமிழ் புலமையை மொத்தமாக காட்டி எழுதப்படும் கட்டுரைகளை நம்மால் ஒரு பாராவுக்கு மேல் படிக்க முடிவதில்லை.
மொத்தமாக பார்க்கும் போது நாம் எதற்காக படிக்கிறோம் என்று பார்த்தால், அது அவரவர் டேஸ்டை பொறுத்தது. ஸ்போர்ட்ஸ், பங்குச்சந்தை, வியாபார உத்திகள், கம்ப்யூட்டர் தொடர்பானவை என்று பல விஷயங்கள் இருக்கிறது. ஒவ்வொன்றிலும் பல பிரிவுகள் உள்ளது. உதாரணமாக "கதை" எடுத்து கொள்ளுங்கள். அதிலேயே ஏகப்பட்ட டேஸ்ட் இருக்கிறது
துப்பறியும் கதை, பக்தி கதை, காதல் கதை என்று பட்டியல் நீளும்.

மெயின் மேட்டேருக்கு வருவோம்.

இவ்வளவு தூரம் படிக்கிறோமே... அதனால் என்ன பலன் கண்டீர்கள்?
ஹெல்த் சம்பந்தமாகவோ, பங்குச்சந்தை சம்பந்தமாகவோ படித்திருந்தால் அதை நம் வாழ்க்கையில் அப்ளை செய்து பார்க்கலாம். ஆனால் கதை மற்றும் சில ஜெனரல் கட்டுரைகளை படிப்பதால் என்ன பலன் இருக்கிறது என்று யோசித்து பார்த்ததுண்டா? அதை நம் வாழ்க்கையில் அப்ளை செய்ய முடியுமா?

முடியாது!

ஆனால் சில வேறு மாதிரியான பழங்கள் கிடைக்கிறது. பெரும்பாலும் குடும்ப நாவல், துப்பறியும் நாவல் படிப்பவர்களை கூர்ந்து கவனித்தால் உங்களுக்கு ஒன்று தெளிவாகும். ஒரு சம்பவத்தை சட்டென்று புரிந்து கொள்வார்கள். அதாவது ஒரு பிரச்சனை சம்பந்தமாக பேசும் போது எதிராளியின் மனோ நிலையை எளிதில் கிரகித்து விடுவார்கள். எதிராளி பேசும் விஷயத்தை வைத்து, அவர் எதனால் இப்படி பேசுகிறார் என்பதையும் கண்டுபிடித்து விடுவார்கள்.
நுணுக்கமான விசயங்களை கூட சீக்கிரமே உள் வாங்கி கொள்வார்கள். இந்த விஷயம் ஒரு சிறந்த நிர்வாகிக்கு அவசியம் தேவை.
சுருக்கமாக சொன்னால் டியுப் லைட்டாக வாழை மட்டையாக இல்லாமல் கற்பூரம் போல டக்கென்று பற்றி கொள்வார்கள் கொஞ்சம் திரும்பி குடும்ப தலைவிகளின் சீரியல்களுக்கு வருவோம். பெரும்பாலான பெண்கள் இப்போது டிவி சீரியல் பார்க்கும் நேரம் போக மீதியுள்ள நேரத்தில் தான் சமைக்கிறார்கள். இது சம்பந்தமாக நிறைய ஜோக்குகளும் வலம் வருகின்றன.

"எடுபட்ட பயக... கரண்ட் கட் பண்ற நேரத்தை மாத்தி வச்சுட்டாங்க.. பன்னண்டு டூ ரெண்டுன்னு மாத்திட்டாங்க.. அந்த நேரத்தில நாலு நாடகம் பார்க்க முடியாம போயிடுமே...!"என்பது சமீபத்திய வசனம்.

ஒரு சம்பவத்தை எழுத்துருவில் படிப்பதற்கும், காட்சிகளாக திரையில் காண்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. கதை படிக்கும் போது நம் கற்பனை திரையில் நாமே காமிரா ஆங்கிளையும், கதாபாத்திர தோற்றங்களையும் முடிவு செய்கிறோம். அதாவது, கதை திரைகதை மட்டுமே மற்றொருவருடையது. நடிகர் நடிகையர், ஒப்பனை, சூழ்நிலை எல்ல்லாம் நாமே சிரிஷ்டிக்கிறோம் . அதனால் மூளைத்திறன் அதிகம் செலவிடப்படுகிறது.
ஆனால் டிவி பார்ப்பது அப்படி இல்லை பார்ப்பது மட்டுமே நமது வேலை. கதையா புரிந்து கொள்ளும் திறன் இருந்தால் போதும். இதனால் மூளையின் வேலை முடக்கபடுகிறது. மூளைக்கு சோம்பல் தனம் வந்து விடுகிறது. மூளை மந்தமாக இருக்கிறது என்பது இதனால் தான். மற்ற எல்லா வேலைகளையும் டைரக்டர், காமிராமேன், ஒப்பனையாளர், நடிகர்கள் பார்த்து கொள்கிறார்கள்.

டிவி பார்ப்பதை விட புத்தகம் படிப்பதே மேல் என்று பீமேலுக்கும் சொல்கிறேன்!
srikarpagam


மின்சார ஷாக்!


இன்றைய சமீபத்திய பிரச்சினை... மின்சாரம்! மழை மாதிரி எப்போது வரும் எப்போது போகும் என்று தெரியாது.
மிஸ்டர் பொதுஜனத்திடம் இது பற்றி கேட்ட போது வந்து விழுந்த குமுறல்கள் சில...
1."நான் ஏழு மணிக்கு தான் படுக்கைய விட்டு எந்திரிப்பேன். ஆனா இன்னைக்கு சூழ்நிலையில காலைல அஞ்சு மணிக்கு எந்திரிச்ச தான் வேலைய ஈசியா முடிக்க முடியும். தெரிஞ்சோ தெரியாமலோ இப்போ நாம் காற்று, நீர், உணவு, உடை இருப்பிடம் அடுத்து மின்சாரத்தை முக்கிய பொருளா மாத்திகிட்டோம். பெரும்பாலும் காலையில் மோட்டார் போட்டு தண்ணிய கேன்ல ஏத்தனும். மிக்ஸியில சட்னி வக்கணும்... ஹீடர்ல தண்ணி சுட வச்சு குளிக்கணும். இப்படி மின்சாரத்தை அதிகமா பயன் படுத்த ஆரம்பிச்சதனால இப்ப கஷ்டமா இருக்கு. இத்தனை மணிக்கு தான் கரண்ட் போகும்னு பேபர்ல போடுறாங்க. ஆனா அதன்படி கரண்ட் கட் பண்றது இல்லை."

2. "கரண்ட் பிரச்சனைய பத்தி அரசியல் கட்சிகளெல்லாம் ஆர்பாட்டம், போராட்டம்னு நிறைய பண்றாங்க... பொது மக்களான நாமளும் களத்தில இறங்கி போராடனும். அரசியல் கட்சிகளை சேர்த்துக்க கூடாது. நாமாவே ஒரு டீம் சேர்ந்து போராடணும்."

3. எலெக்ட்ரிக் பில்லை ஒரு நாள் லேட்டா கட்டினாலே பியுஸ் புடுங்க வந்துடறாங்க. ஆனா கரண்ட் மட்டும் அவங்க இஷ்டத்துக்கு விடறாங்க. பேசாம தமிழ்நாட்டுல இருக்கிற ஓவ்வொரு குடும்பமும் EB பில்ல கரண்ட் ஒழுங்கா விடுற வரைக்கும் கட்ட கூடாது. அப்பத்தான் புத்தி வரும்." என்று ஒருத்தர் பஞ்ச் டயலாக் வைத்தார்.
இல்ல தலைவிகளின் புலம்பல்கள் ஒரு ரகம் என்றால் தொழிலதிபர்கள், கடை முதலாளிகள் உற்பத்தியாளர்கள் ஆஸ்பத்திரிகள் என்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். அடிமட்ட மக்களிலிருந்து மேல்மட்ட மக்கள் வரை பாதிப்பை உண்டாக்கும் இந்த மின்சார தடை சீக்கிரமே ஒரு நல்ல தீர்வுக்கு வந்தால் சந்தோஷம்.
இந்த பிரச்சினையால் ஒருத்தருக்கு நல்ல வாய்ப்பு... திருடர்களுக்கு! அதிலும் செயின் பறிப்புகள் அதிகமாக நடக்கும். பொது மக்களே ஜாக்கிரதை!

என் புள்ள!

"அய்யோ... என் புள்ள! இத்தன பேர் நிக்கிறீங்களே... போய் காப்பாத்துங்களே..."
"பதட்டபடாதேம்மா... அதான் பக்கத்துல குழி தோண்டி ஒருத்தர் உள்ளே இறங்கி இருக்காருல்ல..."
"பாழாப்போன இந்த குழிக்குள்ளயா என் மகன் விழணும்? குழி தோண்டுனவுங்க வேலை முடிஞ்சப்புறம் மூடி வைக்க கூடாதா? இப்ப என் புள்ளயோட உசிருள்ள ஊசலாடுது!"
"பார்த்து... மெதுவா தூக்குங்க!"
என் புள்ளைக்கு காயம் படாம தூக்குங்க... ஏற்கனவே அவனுக்கு ஆஸ்த்துமா இருக்கு. இந்த குழியில மூச்சு விட முடியாம என் புள்ள எப்படி கஷ்டப்படுரானோ..."
"அப்படிதான்... இந்தாப்பா.. இப்படி வாங்கப்பா! சும்மா வேடிக்கை பார்த்துகிட்டு நிக்காதீங்க... ஒரு கை பிடிங்க... அப்பாடா ஒரு வழியா தூக்கியாச்சு... இந்தாம்மா உன் புள்ள!"
"அய்யயோ... என் புள்ள செயினு... ரெண்டு பவுனு... போன மாசம் தான் வாங்கினேன் அத காணோமே.. ஐயோ...!"

.srikarpagam.blogspot.com

amkarpagamamkarpakam

மாங்கல்யம் தந்துனானே...




புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்!


இன்றைய சூழ்நிலையில் மணமான சிறிது நாட்களிலேயே டைவர்ஸ் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்... ஒருத்தருக்கொருத்தர் பிடிக்க வில்லை என்றால் உடனே டைவர்ஸ்! மேற்கத்திய கலாசாரம் இதிலேயும் புகுந்து விட்டது. முன்பை விட டைவர்ஸ் கேஸ் அதிகமாக உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.

பிரச்சினை என்ன என்பதை இருவரும் உட்கார்ந்து பேசினாலே விஷயம் சுமூகமாக முடிந்து விடும்.

ஆனால் சுற்றி இருக்கும் சொந்தகாரர்கள் இருவருக்கும் இடையில் ஈகோவை வளர்த்து விடுகிறார்கள். ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய குடும்ப பிரச்சனை சம்பந்தமாக வெளி ஆட்களிடம், முக்கியமாக சொந்தகாரர்களிடம் கருத்து கேட்டால், அவர்கள் பொதுவான கருத்து கூறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், கருத்து கூறுபவர்கள் அவர்களுக்கு சாதகமாக உள்ள முடிவையே சொல்வார்கள்.mu

மூன்று விசயங்களை மனதில் வைத்து கொண்டாலே குடும்ப வாழ்க்கை இனிக்கும்!

ஒருவர், மற்றொருவர் உணர்வுகளை-ரசனைகளை புரிந்து கொண்டு விட்டு கொடுத்து வாழ வேண்டும்!

**இருவரும் இன்ப துன்பங்களை பகிர்ந்து, மனம் திறந்து பேசி, ரகசியங்கள் ஏதுமற்ற நட்புறவுடன் வாழ வேண்டும்!

**கூச்சமோ தயக்கமோ இன்றி இருவரும் சில பாலியல் விசயங்களை பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும்!

ஓகே ... தூள் கிளப்புங்கள்...!


நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

"ரோசமான பொம்பளையா இருந்தா இந்த மரத்து மேல நீ கை வைக்க கூடாது!"
"நான் ஏண்டி கைய வைக்க கூடாது? எங்கம்மா கொண்டு வந்த முருங்க கட்டய நட்டு வச்சது நான் தாண்டி!"
"நட்டு வச்சா மட்டும் போதுமா... தண்ணி ஊத்தி காப்பாத்த வேணாமா? தெனைக்கும் தண்ணி ஊத்தி காப்பாத்தினவா நான் தாண்டி... நீ வீடு தங்கினா தாண்டி தண்ணி ஊத்த ஞாபகம் வரும். நீ தான் ஊர் சுத்தி ஆச்சே!"
"யாருடி ஊர் சுத்தி... நீ தாண்டி ஊர் சுத்தி!"
"அம்மா... அம்மா! உங்க சண்டைய கொஞ்சம் நிறுத்திட்டு நான் சொல்றத கேக்கிறீங்களா? ரோட்ட அகலபடுதுறதால ரோட்டோர மரத்தையெல்லாம் வெட்டி எடுக்கிறதுக்கு காண்ட்ராக்ட் எடுத்து இருக்கேன். கொஞ்சம் தள்ளி இருங்க. அப்புறம் இன்னொரு விஷயம்... நீங்க ரெண்டு பேரும் இந்த மரத்தை உருவாக்கி இருக்கிறீங்கன்னு உங்க சண்டைய வச்சு புரிஞ்சுகிட்டேன். அதனால இதுல இருக்கிற முருங்கை காய்களை நீங்களே பங்கு போட்டுகுங்க!"
"நான் எதுக்கு அவளுக்கு பங்கு தரணும்?"
"நீ எனக்கு பங்கு தர வேணாம்... முழுசையும் நானே எடுத்துக்கிறேன்!"
காண்ட்ராக்டர் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார்!!
://srikarpagam.blogspot.com
amkarpagam@gmail.com

குறளின் குரல்-2

தன்னம்பிக்கை
கிருஷ்ணனுக்கு மனம் சலிப்பாக இருந்தது. நீண்டு கிடந்த சாலையில், தான் மட்டும் தனியாளாக உணர்ந்தான். எதிர்காலமே ஒரு கேள்விகுறி போல் அவன் நெஞ்சை குத்தியது!
"எத்தனை இன்டர்வியு... எல்லாமே புஷ்வானமா போச்சே... வீட்டிலே சாப்பாடு கூட நிம்மதியா சாப்பிட முடியல!" என்றது மனம்.
காற்று வாக்கில் யாரோ ஒரு மகான் சொற்பொழிவாற்றும் ஒலியை கேட்டு அங்கே சென்றான்.
சிவன் கோவில். சிறிய கோவில் தான், ஆனாலும் சிறப்பாக இருந்தது.
சுற்று பிரகாரத்தில் அந்த மகான் பேசினார். சுற்றிலும் ஐம்பது பேராவது உட்கார்ந்திருப்பார்கள்.
"திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால்... கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின். அதாவது 'தூய அறிவு வடிவாய் விளங்கும் இறைவனுடைய திருவடிகளை ஒருவன் பற்றி நின்று நாளும் தொழுது எழவில்லை என்றால், அவன் கற்ற கல்வியால் விளையக்கூடிய பயன் என்ன? அப்பிடின்னு கேக்கிறார்".
கிருஷ்ணனுக்கு கோபம் வந்து விட்டது. "சாமி... நான் தினமும் சாமி கும்பிட்டுட்டு தான் இருக்கேன். ஆனாலும் எனக்கு இன்னும் வேலை கிடைகலயே" என்றான்.
மகான் அவனை பார்த்தார்.
அவர் கண்களை அவனால் சந்திக்க முடியவில்லை. என்ன ஒரு தீர்கமான பார்வை...
"உன் பேச்சிலேயே நம்பிக்கை இன்மை தெரிகிறது . நீ எம்பெருமானை வழிபடும் முறை சரியில்லை. நீ சாமி கும்பிடும் போது உன் ஆழ் மனதில் என் திறமைக்கு யார் வேலை தருவார்கள்' என்ற நினைப்பிலேயே சாமி கும்பிடுகிறாய்"
கிருஷ்ணன் யோசித்து பார்த்தான். அவர் சொல்வதில் உண்மை இருப்பது புரிந்தது.
"அது உன் குற்றமில்லை. நீ வளர்ந்த சூழ்நிலை அப்படி. கடவுளை தொழுவது எனபது தேங்காய் பழம் வாங்கி அர்ச்சனை செய்வதிலோ சூடம் கொளுத்துவதிலோ yஇல்லை. கடவுளை முழுவதும் நம்பி வழிபடுபவர்களுக்கு தன்னம்பிக்கை பெருகும். ஏதோ கோவிலுக்கு வந்தோம்... சாமி கும்பிட்டோம் என்று இல்லாமல் பத்து நிமிடம் அமர்ந்து எம்பெருமானின் உருவத்தை மனதில் நினைத்து மனத்தை ஒரு முகப்படுத்தி தியானம் செய். ஒரு மாதத்தில் உன் தன்னம்பிக்கை பெருகுகிறதா இல்லையா பார்." என்று கூறி விட்டு தன் சொற்பொழிவை தொடர்ந்தார்.
கிருஷ்ணன் மனத்தில் அப்போதே தன்னம்பிக்கை ஊற்றெடுக்க ஆரம்பித்தது
.

www://srikarpagam.blogspot.com
email: amkarpagam@gmail.com

மனிதரில் இத்தனை நிறங்களா?






உள்ளத்தை சொல்கிறேன்!
மேலே உள்ள படங்களை சில நண்பர்களிடம் காண்பித்து கருத்து கேட்ட போது...
"நட்புக்கு ஜாதி மத பேதம், உருவம், எதுவும் தேவை இல்லை! நம்பிக்கை மட்டுமே போதும்..." என்றார் ஒரு நண்பர்.
மற்றொருவர், "இந்த நாய் ரொம்ப சாதுவாகவும், சோம்பேறி தனமாகவும் இருக்கு!" என்றார்.
இன்னொருவர், "இந்த பூனைக்கு எத்தனை துணிச்சல்!" என்றார்.
"ரெண்டும் காதல் பண்ணுது!" -- ஒரு காதலர்.
உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
ஈமெயில்: amkarpagam.gmail.com

ராமேஸ்வரம் டிப்ஸ்!

சுற்றுலா!


**ராமேஸ்வரத்துக்கு பஸ்ஸில் செல்வதை விட ரயிலில் செல்வது உற்சாகத்தை கொடுக்கும். உங்கள் ஊரிலிருந்து ரயில் இல்லையென்றால்-- மதுரையிலிருந்தோ, திருச்சியிலுருந்தோ புறப்படும் ரயிலில் போகலாம். ரயிலில் பயணம் செய்ய சொல்வதற்கு காரணம்... ரயில் கடல் பாலத்தை கடக்கும் போது ஏற்படும் உற்சாகம்! கடல் நீரை ஒட்டியே ரயில் செல்வதால் ஏற்படும் குதூகலம்!! மேலும், பஸ் பயணதொகையை விட ரயில் பயணத்தொகை பாதியாக குறைகிறது.
**கோவில் அருகிலுள்ள லாட்ஜ் அல்லது சாத்திரங்கள் ஏதாகிலும் இடம் பிடித்து கொள்வது நல்லது. காலையில் ஐந்து மணியிலிருந்து ஆறு மணி வரை ஸ்படிக லிங்க தரிசனம் செல்வதற்கு வசதியாக இருக்கும். ஸ்படிக லிங்க தரிசனம் செய்வதற்கு விடிகாலை மூன்று முப்பது மணியிலிருந்தே கியு வளர ஆரம்பிக்கிறது. விசேச தினங்களில் பெரிய கியு!**ராமேஸ்வரம் கோவிலுக்கு திங்கட்கிழமை செல்வது தான் சிறப்பு. அது எந்த திங்களாக இருந்தாலும் சரி!
**கோவிலுக்குள் நுழையுமுன் வலது பக்கம் ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. அதன் சுற்று பிரகாரத்தை சுற்றி வரும் போது ஆத்ம லிங்க தரிசனம் கிடைக்கும். முதலில் ஆத்ம லிங்கத்தை தரிசித்து விட்டு கோவிலுக்குள் செல்வது தான் சிறப்பு. ஏனென்றால், அந்த லிங்கம் ஆஞ்சநேயர் கொண்டு வந்த லிங்கமாக நம்பப்படுகிறது. முதல் அபிசேகம் ஆத்மலிங்கத்துக்கு தான் என்று ஸ்ரிராமபிரானே சொன்னதாக புராணம் கூறுகிறது!
**கோவில் சுற்று பிரகாரத்தை அவசியம் பார்க்க வேண்டும். மிக நேர்த்தியாக கட்டடகலையின் உன்னதம் நம் கண்களுக்கு முன் விரிகிறது! இந்தியாவிலேயே மிக பெரிய சுற்று பிரகாரமாக சொல்லப்படுகிறது.
**ராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிளம்பி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் சென்று வழிபட்டு வர வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.


email: amkarpagamgmail.com

அமில மழை!

கதம்பம்

சிடிட்டி கேள்விபட்டிருப்பீர்கள்... அதென்ன ஆசிட் ரெயின்? அதாவது அமில மழை?
கோடிகணக்கான ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த விலங்குகள், தாவரங்கள் பூமிக்குள் புதைந்து மண்ணோடு மண்ணாக மக்கி போய் இயற்க்கை வாயுபொருட்கள் எண்ணை, நிலக்கரியாக அவதாரம் எடுக்கிறது. தசாவதாரத்தில் கமல் பல அவதாரங்கள் எடுப்பது போல...
மேற்கூறப்பட்ட மூன்று பொருட்களிலும் சல்பர் இருப்பது தான் வினையே! அவை எரிக்கப்படும்போது சல்பர் ஆக்ஸிஜன் உடன் சேர்ந்து sulphar di oxide ஆக உருமாறுகிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
பூமியின் மேற்பரப்பில் nitrogen, oxygen இயற்கையாகவே இருக்கிறது. வாயுக்கள், நிலக்கரி, எண்ணை எரிக்கப்படும்போது nitrogen oxygen இணைந்து nitrogen di oxide ஆக உருமாறுகிறது.
sulphur di oxide அல்லது nitrogen oxide நீர் மூலக்கூறில் சேர்ந்து அமில மழை ஆக மாறி பூமியில் விழுகிறது.
இது பெரும்பாலும் நீர்நிலைகளான ஆறு குளம் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஊறு விளைவிக்கிறது. முக்கியமாக நாம் சாப்பிடும் மீன்களுக்கு அசவுகரியம்!

______________________________________________________

வசனம்!
அறிந்தவர் வீட்டுக்கு தெரிந்தவர் சென்ற போது நாய் குறைத்தது.
நாய் சொந்தக்காரர்," சும்மா 'லொள்ளு' பண்ணாதே!!" என்றார், நாயை பார்த்து!

__________________________________________________________________________

கவிதை
அரண்மனைக்குள் ஒரு சர்ச்சை
கூந்தல் மணம் இயற்கையா...
குங்கிலியத்தால் செயற்கையா என்று!
உள்ளே வந்தாள் மன்னனின் மனைவி
'முகர்ந்து பார்' என்றாள்
கட்டிய சவுரியை கையில் எடுத்து!

all rights are reserved by karpagam

குறளின் குரல்!

" அகரம்னா என்னப்பா?"

டிவியில் பாலச்சந்தர் படம் தொடங்க போகிறது என்பதற்கு அறிகுறியாக திருவள்ளுவர் சிலை திரையில் சுற்றியது. பின்னணியில் எம். எஸ். விஸ்வநாதன் "அகர முதல எழுத்தெல்லாம்... ஆதி பகவன் முதற்றே உலகு!" என்று கவர்ச்சியான குரலில் பாடினார்.
"ஹையா! என்னோட பாடத்துல வர்ற திருக்குறளை பாடறாங்கப்பா!" என்று துள்ளியது ஒரு குட்டீஸ். தொடர்ந்து, "அப்பா... இந்த குறளுக்கு அர்த்தம் என்னப்பா?" என்று கேட்டது.
"இது கடவுள் வாழ்த்துல அதிகாரம் ஒண்ணுல வர்ற முதல் குறளுப்பா! இந்த குறளோட விளக்கம் என்னன்னா... 'எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாக கொண்டு விளங்குகின்றன. அதை போல் எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாக விளங்கும் பகவானையே முதலாக கொண்டு விளங்குகின்றது உலகம்' சரிதானா?"
"அப்பா... அகரம்னா என்னப்பா?"
" 'அஎன்னும் எழுத்துன்னு அர்த்தம்பா. எல்லா எழுத்துக்கும் முதல் எழுத்து அதாம்பா! இப்ப இந்தியாவோட முதல் குடி மகன் யாரு?"
"நம்ம ஜனாதிபதி தானப்பா..."
கரெக்ட்! அது மாதிரி உலகத்துக்கு முதல் குடிமகன் பகவான் தான் அப்படிங்கிறார் திருவள்ளுவர்!"
"ஆனா அப்பா! நம்ம நாட்டுல ஜனாதிபதியை rubber stamp மாதிரி பயன்படுதுறாங்கன்னு சொல்றாங்களே... நாம கடவுளையும் அப்படித்தான் பயன் படுத்துகிறோமா ? "
அப்பா வாயடைத்து நிற்கிறார்!

உணவு தரும் தேனீக்கள்!


வருக... வருக...!

வணக்கம்! நமது தமிழ் பண்பாட்டின்படி இரு கரம் கூப்பி வணங்கி வரவேற்கிறேன். இந்த கட்டுரையை படித்து கொண்டிருக்கும் நீங்கள், இந்த நிமிடத்தில் என்ன மாதிரியான மனநிலையில் இருந்தாலும் சரி... அதையெல்லாம், காலணியை கழற்றி வீட்டுக்கு வெளியே வைத்து விட்டு வருவதுபோல் துக்கங்களையும் தோல்விகளையும் கழற்றி தூர எறிந்து விட்டு சிரித்த முகத்துடன் வந்தீர்களானால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

நாம் இயற்கையை எப்படி உதாசினபடுத்துகிறோம் என்பதை பற்றி சற்று சிந்திப்போம்.

இயற்கையை விடுத்து நாம் செயற்கைக்கு மாற ஆரம்பித்த கணத்திலிருந்து பூமியை அசுத்தமாக்கி கொண்டிருக்கிறோம். சுற்றுப்புற சூழ்நிலையை நமது வசதிக்காக தூய்மை கேடாக்கி கொண்டிருக்கிறோம்.

நடந்து செல்லும் தூரத்தைகூட பைக்கில் கடந்து செல்கிறோம்.

இயற்கை நமக்கு ஏகப்பட்ட உதவிகளை செய்து நம்மை வாழ வைக்கிறது. ஆனால் நாம் இயற்கையை வாழ வைக்க வேண்டாம்... அட்லீஸ்ட் ஏறி மிதிக்காமல் இருந்தாலே போதும்.

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது!

பழைய பழமொழி...

நமது சாப்பாட்டு அறைக்கு ஆப்பிள், சோயாபீன்ஸ், வெள்ளரிக்காய் முதலியவை போன்று தொண்ணூறு வகைக்கு மேற்பட்ட சுவையான பழங்கள், காய்கறிகளை நமக்கு அழிப்பது யார்?

விவசாயிகள்...

இல்லை...

விவசாயிகள் தானே இதையெல்லாம் விளைவிக்கிறார்கள்?

உண்மைதான்!

ஆனால், தேனீக்கள் அதை விட சிறப்பாக இயற்கையாகவே காய்கனிகளை விளைவிக்கிறது.

தேனீக்கள் துணையில்லாமல் நமக்கு சத்தான சுவையான பழங்கள், காய்கறிகள் பாதிக்குமேல் கிடைக்காமல் போய் விடும்.

தேனீக்களின் மகரந்த சேர்க்கை விளைவுகளாலே தான் நாம் பசியாறிகொண்டு இருக்கிறோம்.

பூச்சிஇனங்களின் மகரந்தச்சேர்க்கயால் மூன்றில் ஒரு பங்கு உணவினை பெறுகிறோம். அதிலும் தேனீக்களின் பங்கு எண்பது சதவீதம் என்று us department of agriculture சொல்கிறது.

நாம் தேனீக்கள் அளவுக்கு எண்பது சதவீதம் இயற்கையான முறையில் எந்த விஷயத்தையும் செய்ய முடியாவிட்டாலும், கொஞ்சமாவது இயற்கையோடு இயைந்து வாழ கற்று கொள்வோம்.

நம் முன்னோர்கள் எல்லாம் இயற்கையை நேசித்தவர்கள்... இயற்கையோடு வாழ்ந்தவர்கள்! நாம் இப்போது இயற்கையை போட்டோக்களிலும், சித்திரங்களிலும் மட்டுமே நேசிக்கிறோம்!!